(நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சோபிக்கத் தவறிவரும் இலங்கை கிரிக்கெட் அணியை புத்தாண்டில் உயரிய நிலைக்கு இட்டுச் செல்ல உறுதிபூண்டுள்ள புதிய தலைமைப் பயிற்றுநர் சந்திக்க ஹத்துருசிங்க, வீரர்கள் ஒழுக்கம் பேணுவதை வலியுறுத்தியுள்ளார். அத்துடன் அணித் தேர்விலும் தனக்கு அதிகாரம் இருக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். உலக கிண்ண சம்பியன் பட்டத்தை சுவீகரித்து 21 வருடங்கள் ஆன நிலையில் 2017இல் மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் மோசமான பின்னடைவைக் கண்ட இலங்கை அணியை இன்னும் இரண்டு வருடங்களில் […]
Day: January 1, 2018
கணவனை பிரிந்து வந்து பலருடன் கள்ளத்தொடர்பு: துணியால் கழுத்தை இறுக்கி இளம்பெண் படுகொலை
கணவனை பிரிந்து சென்னைக்கு வந்த இளம்பெண், பலருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது. ஓராண்டுக்கு பிறகு அவரது சடலம் கிணற்றில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த கொலை தொடர்பில் கரூர் மாவட்ட பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கரூர் மாவட்டம், ஏமூர் அருகேயுள்ள நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் தனது 28 வயதான மனைவி இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், தகராறு ஏற்பட்டு கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து கடந்த […]
தேர்தல் பிரசாரத்தின்போது விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 625 குர்ஆன் பிரதிகள் சிக்கின – கற்பிட்டியில் சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர்மட்டக் குழு விசாரணை
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரால் தேர்தல் பிரசார காலப்பகுதியில் விநியோகிக்கும் நோக்கில் வைத்திருந்த 625 புனித குர்ஆன் பிரதிகள் கற்பிட்டி- கைப்பற்றப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கற்பிட்டி பிரதேச சபைக்கு போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ஒருவரின் வீட்டிலிருந்து நேற்று முன்தினம் இரவு இந்த புனித குர்ஆன்களை பொலிஸார் கைப்பற்றப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள பொலிஸ் தேர்தல் காரியாலயத்துக்கு கிடைத்த முறைப்பாடு ஒன்றுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் […]
சிறுவர் கார்ட்டூன் கதாபாத்திரத்தை போன்று நடித்துப் பார்க்க முயற்சித்த சிறுவன் உயிரிழப்பு
(ரெ.கிறிஷ்ணகாந்) சிறுவர் கார்ட்டூன் ஒன்றில் வரும் வீரர் கதாபாத்திரத்தை போன்று நடித்துப் பார்க்க முயற்சித்த சிறுவன் உயிரிழந்த சம்பவமொன்று திருகோணமலை மாவட்டத்தின் பதவிசிறிபுர, ஜயந்திவெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பதவிசிறிபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் தனது தாயின் உடைகளை அணிந்து, பெண்களின் உடையிலேயே தனக்கான தலைக்கவசமொன்றையும் தயாரித்து அணிந்துகொண்டு தனக்கு பிடித்தமான கார்டூனில் வரும் வீரர் ஒருவனின் கதாபாத்திரத்தை போன்று நடிப்பதற்கு தயாராகியுள்ளார். அதன்பின்னர் தனது வீட்டுக்கு முன்பாக அமைந்திருந்த மரமொன்றின் கிளையில் கயிற்றைக் […]
அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த் அறிவித்தார்; தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக கூறுகிறார்
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துள்ளார். நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளேன் என ரஜினிகாந்த் நேற்று அறிவித்தார். சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களை ரஜினி சந்தித்து வருகிறார். நேற்றைய ஆறாவது நாள் சந்திப்பில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் […]